செய்திகள்
கோப்புபடம்

பல்லடத்தில் கார் டிரைவர் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-11-22 09:11 GMT   |   Update On 2021-11-22 09:11 GMT
கடந்த சில மாதங்களாக சக்திவேல் அதிக குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.
பல்லடம்:

பல்லடம் வடுகபாளையம் ஹாஸ்டல் காலனியில் வசிக்கும் முருகசாமி மகன் சக்திவேல் (25). கார் ஓட்டுநராக வேலை செய்து வந்தார். இவரது மனைவி ஸ்ரீமதி(22). இந்தநிலையில் இவர் கடந்த சில மாதங்களாக அதிக குடிப்பழக்கத்திற்கு ஆளானதாக கூறப்படுகிறது.

கடந்த சிலநாட்களுக்கு முன்பு குடிப்பழக்கம் குறித்து கணவன் - மனைவி இருவருக்கும் தகராறு ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று காலை வீட்டில் யாரும் இல்லாத போது சக்திவேல் வீட்டின் விட்டத்தில் சேலையால் தூக்குப்போட்டு கொண்டார். அக்கம் பக்கம் உள்ளவர்கள் உதவியுடன் அவரை மீட்டு பல்லடம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். 

அங்கு அவரை பரிசோதித்த டாக்டர் ஏற்கனவே இறந்து விட்டதாக கூறினார். தற்கொலை குறித்து அவரது தாயார் வனஜா கொடுத்த புகாரின் பேரில் பல்லடம் போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.
Tags:    

Similar News