செய்திகள்
சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக பதவியேற்றார் முனீஸ்வர் நாத் பண்டாரி
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை:
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
சென்னை ஐகோர்ட்டு தலைமை நீதிபதியாக பதவி வகித்து வந்த சஞ்சீவ் பானர்ஜி, மேகாலயா ஐகோர்ட்டுக்கு மாற்றப்பட்டார். இதையடுத்து அலகாபாத் ஐகோர்ட்டின் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரி, சென்னை ஐகோர்ட்டு மூத்த நீதிபதியாகவும், பொறுப்பு தலைமை நீதிபதியாகவும் நியமித்து ஜனாதிபதி உத்தரவு பிறப்பித்து இருந்தார்.
இந்நிலையில், சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதியாக முனீஸ்வர் நாத் பண்டாரி இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.
சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் நடைபெற்ற பதவியேற்பு விழாவில் நீதிபதி முனீஸ்வர் நாத் பண்டாரிக்கு கவர்னர் ஆர்.என்.ரவி பதவிப்பிரமாணம் செய்து வைத்தார்.
கவர்னர் மாளிகையில் நடைபெற்ற நிகழ்ச்சியில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், சபாநாயகர், எதிர்க்கட்சி தலைவர் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
இதையும் படியுங்கள்... உலகளவில் கொரோனாவால் பாதிப்பு அடைந்தோர் எண்ணிக்கை 25.78 கோடியை கடந்தது