செய்திகள்
டிடிவி தினகரன்

காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது? - டி.டி.வி.தினகரன் ட்வீட்

Published On 2021-11-21 13:48 GMT   |   Update On 2021-11-21 13:48 GMT
சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் கொல்லப்படுவது பொதுமக்களிடையே மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருப்பதாக டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
சென்னை:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள சோழ மாநகர் பகுதியை சேர்ந்தவர் பூமிநாதன் (வயது 51). திருச்சி மாவட்டம் நவல்பட்டு போலீஸ் நிலையத்தில் சிறப்பு சப்-இன்ஸ்பெக்டராக பணியாற்றி வந்த இவர், ஆடு திருடர்களால் நேற்று இரவு கொடூரமாக வெட்டி கொல்லப்பட்டார். இந்த சம்பவம் தமிழகம் முழுவதும் கடும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. குற்றவாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது.

இந்த கொலை தொடர்பாக பல்வேறு அரசியல் தலைவர்கள் வேதனையையும், கண்டனமும் தெரிவித்து வருகின்றனர்.

இந்நிலையில், அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் கூறியிருப்பதாவது:-

திருச்சி நவல்பட்டு காவல்துறை சிறப்பு உதவி ஆய்வாளர் பூமிநாதன்  திருடர்களால் வெட்டிக் கொல்லப்பட்டிருப்பது பெரும் அதிர்ச்சியையும் வேதனையையும் அளிக்கிறது.

ரோந்து பணிக்கு சென்ற திரு.பூமிநாதன், பாதுகாப்பு மற்றும் தகவல் தொடர்பு கருவிகள் எதுவும் கையில் இல்லாமல் நான்கு மணி நேரத்திற்கு மேலாக சாலையில் கிடந்து போராடி உயிர்விட்டதாக வரும் செய்திகள் நெஞ்சை கனக்கச் செய்கின்றன.

சமூக விரோத சக்திகளால் காவல்துறை அதிகாரிகள் இப்படி கொல்லப்படுவது பொதுமக்களிடையே  மிகுந்த அச்சத்தை ஏற்படுத்தியிருக்கிறது. தி.மு.க ஆட்சிக்கு வந்தாலே சட்டம்-ஒழுங்கு மோசமாகிவிடும் என்பது நிரூபணமாக தொடங்கியிருக்கிறதோ? காவல்துறையினருக்கே இந்த நிலைமை என்றால் மக்களை யார் பாதுகாப்பது?

இவ்வாறு டிடிவி தினகரன் கூறி உள்ளார்.
Tags:    

Similar News