செய்திகள்
போராட்டத்தில் உயிர்நீத்த விவசாயிகளுக்கு அஞ்சலி
3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்தனர்.
பல்லடம்:
மத்திய அரசின் 3 வேளாண் சட்டங்களை எதிர்த்து விவசாயிகள் டெல்லியில் தொடர்ந்து ஓராண்டு காலமாக போராட்டம் நடத்தி வந்தனர். இதில் சுமார் 700க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.
இந்த நிலையில் பல்லடம் பனப்பாளையம் சோதனைசாவடி அருகே நகர காங்கிரஸ் கட்சி சார்பில் விவசாயிகள் போராட்டத்தில் உயிரிழந்த விவசாயிகளுக்கு மெழுகுவர்த்தி ஏந்தி அஞ்சலி செலுத்தும் நிகழ்ச்சி நடைபெற்றது.
காங்கிரஸ் நகர தலைவர் ஈஸ்வரமூர்த்தி தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில் செயல் தலைவர் மணிராஜ் மற்றும் நிர்வாகிகள் நரேஷ்குமார், செந்தில்குமார், உத்திரமூர்த்தி, சாகுல் அமீது உள்பட பலர் கலந்து கொண்டனர்.