செய்திகள்
விவசாய கடன் தள்ளுபடி விவகாரம் - குமரலிங்கத்தில் அ.தி.மு.க., ஆர்ப்பாட்டம்
குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.
மடத்துக்குளம்:
கூட்டுறவு சங்கங்களில் விவசாயிகள் வாங்கிய பயிர்க் கடனை முறையாக தள்ளுபடி செய்யாததை கண்டித்து மடத்துக்குளம் தொகுதி அ.தி.மு.க. சார்பில் குமரலிங்கத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்திற்கு மடத்துக்குளம் சட்டமன்ற தொகுதி எம்.எல்.ஏ., வும், திருப்பூர் புறநகர் கிழக்கு மாவட்ட அ.தி.மு.க. செயலாளருமான சி.மகேந்திரன் தலைமை வகித்தார்.
ஆர்ப்பாட்டத்தில் சிவலிங்கம், காளீஸ்வரன், லோகநாதன், சிவக்குமார், அன்னதான பிரபு, நடப்பன், பாலன் உள்பட அ.தி.மு.க. நிர்வாகிகள் பங்கேற்றனர்.
இதில் குமரலிங்கம், பெருமாள்புதூர், கொழுமம், சாமராயபட்டி பகுதியை சேர்ந்த விவசாயிகள் திரளாக கலந்து கொண்டனர்.