செய்திகள்
சென்னையில் இருந்து 150 கி.மீ. தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம்
கனமழை காரணமாக தமிழகத்தில் 10-க்கும் மேற்பட்ட மாவட்டங்களில் பள்ளி- கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
வங்கக்கடலில் நிலவிய காற்றழுத்த தாழ்வு பகுதி, தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி நிலைகொண்டுள்ளது. தற்போது காற்றழுத்த தாழ்வு மண்டலம் சென்னையில் இருந்து 150 கி.மீட்டர் தொலைவிலும், புதுச்சேரியில் இருந்து 120 கி.மீட்ர் தொலைவிலும் மையம் கொண்டுள்ளது. மணிக்கு 18 கி.மீட்டர் வேகத்தில் வட தமிழகத்தை நோக்கி நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது.