செய்திகள்
சின்னேரிபாளையம் குளத்தில் குளிக்க தடை
பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கிராம நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
அவினாசி:
கடந்த சில நாட்களாக பெய்த மழையால் அவினாசி கிராமபுறங்களில் உள்ள சில குளம், குட்டைகளில் நீர் நிரம்பியுள்ளது. இதனால் பள்ளி மாணவர்கள், சிறுவர், சிறுமிகள் உள்ளிட்டோர் குளம், குட்டைகளில் இறங்கி நீச்சல் அடிப்பதும், விளையாடவும் செய்கின்றனர்.
அப்போது குளத்தின் ஆழமான பகுதிக்கு செல்வதால் உயிரிழப்பு சம்பவங்கள் ஏற்படுகிறது. எனவே குளம், குட்டைகளில் குளிக்க சிறுவர் மற்றும் பொதுமக்கள் செல்வதை தடுக்கும் வகையில் கிராம நிர்வாகத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தீயணைப்பு துறையினர் அறிவுறுத்தினர்.
அதன்படி அவினாசி சின்னேரிபாளையம் குளத்தில் தண்ணீர் நிரம்பியுள்ளதால் யாரும் அங்கு செல்லக்கூடாது என ஊராட்சி நிர்வாகத்தினர் குளக்கரை மற்றும் குட்டை பகுதிகளில் அறிவிப்பு விளம்பர பலகை வைத்துள்ளனர்.