செய்திகள்
தற்கொலை

பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை

Published On 2021-11-16 10:10 GMT   |   Update On 2021-11-16 10:10 GMT
பாப்பாக்குடி அருகே தொழிலாளி தற்கொலை செய்துகொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
நெல்லை:

பாப்பாக்குடி அருகே உள்ள நந்தன்தட்டை கிராமத்தை சேர்ந்தவர் உச்சிமாகாளி (வயது 50), தொழிலாளி. இவர் தினசரி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்தார். இதனால் இவரது மனைவி ராமலட்சுமி கணவரை கண்டித்தார்.

இதில் மனமுடைந்த உச்சி மாகாளி நேற்று தனது வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்துகொண்டார். இது குறித்து பாப்பாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.

Tags:    

Similar News