செய்திகள்
மின்சாரம் தாக்குதல்

ஆனைமலை அருகே மின்சாரம் தாக்கி கிளீனர் பலி

Published On 2021-11-13 10:30 GMT   |   Update On 2021-11-13 10:30 GMT
கோவை மாவட்டம் ஆனைமலை அருகே மின்சாரம் தாக்கியதில் கிளீனர் சம்பவ இடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக உயிரிழந்தார்.
கோவை:

கோவை மாவட்டம் ஆனைமலை அருகே உள்ள வாழைகொம்பை சேர்ந்தவர் குழந்தைவேலு (வயது 47). இவர் அந்த பகுதியில் உள்ள ஒரு தனியார் பள்ளி பஸ்சில் கீளினராக வேலை பார்த்து வந்தார்.

சம்பவத்தன்று இவர் தேவசாதன்புதூரில் உள்ள தனது உரிமையாளரின் தோட்டத்துக்கு சென்றார். அப்போது தோட்டத்தில் சென்ற மின்சார வயரை மிதித்தார். கண்ணிமைக்கும் நேரத்தில் மின்சாரம் தாக்கி தூக்கி வீசியது. இதில் சம்பவஇடத்திலேயே உடல் கருகி பரிதாபமாக இறந்தார்.

இதனை பார்த்த அந்த வழியாக சென்றவர்கள் இது குறித்து ஆனைமலை போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். உடனடியாக போலீசார் சம்பவஇடத்துக்கு விரைந்து சென்று மின்சாரம் தாக்கி இறந்த குழந்தைவேலுவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக பொள்ளாச்சி அரசு ஆஸ்பத்திரிக்கு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர்.

இதுகுறித்து ஆனைமலை போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News