செய்திகள்
மழை

நள்ளிரவில் இடி, மின்னலுடன் சென்னையை குளிர்வித்த கனமழை

Published On 2021-11-06 19:47 GMT   |   Update On 2021-11-06 19:47 GMT
சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்து வருகிறது.
சென்னை:

சென்னையை பொருத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக மேகமூட்டத்துடன் காணப்படும். நகரின் ஒரு சில பகுதிகளில் மிதமான மழை, அவ்வப்போது கனமழை பெய்யக்கூடும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது.

இந்நிலையில், சென்னையில் நேற்று நள்ளிரவு முதல் இடி, மின்னலுடன் கூடிய கன மழை பெய்தது. எழும்பூர், சென்னை சென்ட்ரல், புரசைவாக்கம், அண்ணாநகர் உள்பட நகரின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்தது.  
 
Tags:    

Similar News