செய்திகள்
கணவர் கோகுலுடன் விபத்தில் பலியான நந்தினிபாரதி.

திருமணமான ஒரே ஆண்டில் மனைவி-மகளை பறிகொடுத்த வக்கீல்

Published On 2021-11-06 09:05 GMT   |   Update On 2021-11-06 09:05 GMT
மதுரையை சேர்ந்த வக்கீல் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்று திரும்பிய போது ஏற்பட்ட விபத்தில் மனைவி மற்றும் மகளை பறிகொடுத்துள்ளார்.
மதுரை:

கொடைக்கானல் மலையில் கார் கவிழ்ந்த விபத்தில் மதுரை சமயநல்லூர் அருகே உள்ள தேனூரைச் சேர்ந்த வக்கீல் கோகுலின் மனைவி நந்தினி பாரதி, 3 மாத கைக்குழந்தை தனயாழினி, மாமியார் அழகுராணி ஆகியோர் பரிதாபமாக இறந்தனர்.

வக்கீல் கோகுலுக்கும், தேனி மாவட்டம் சுப்புலாபுரம் சத்யா நகரைச் சேர்ந்த பால்ராஜ் மகள் நந்தினி பாரதிக்கும் இடையே கடந்த ஓராண்டுக்கு முன்பு தான் திருமணம் நடந்தது.

நந்தினி பாரதி சுப்புலாபுரத்தில் உள்ள விதை சுத்திகரிப்பு நிலையத்தில் வேளாண்மை அதிகாரியாக பணியாற்றி வந்தார். இவருக்கு 3 மாதங்களுக்கு முன்பு தான் பெண் குழந்தை பிறந்தது.

தீபாவளிக்காக கோகுல் மனைவி மற்றும் குடும்பத்துடன் மாமனார் வீட்டுக்குச் சென்றார். பின்னர் அவர்கள் கொடைக்கானலுக்கு சுற்றுலா சென்றுவிட்டு திரும்பிய போது தான் கார் கவிழ்ந்து 3 பேரும் பலியாகி விட்டனர்.

இந்த சம்பவம் உறவினர்கள் மற்றும் நண்பர்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. அவர்களது உடலை பார்த்து உறவினர்கள் கதறி அழுதது பரிதாபத்தை ஏற்படுத்தியது.
Tags:    

Similar News