செய்திகள்
கோப்புபடம்

பராமரிப்பு பணி காரணமாக மாநகராட்சி பகுதிகளில் இன்றும்-நாளையும் குடிநீர் விநியோகம் கிடையாது

Published On 2021-11-05 07:51 GMT   |   Update On 2021-11-05 07:51 GMT
பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்த வேண்டும்.
திருப்பூர்:

திருப்பூர் மாநகராட்சி சார்பில் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாநகராட்சி 3 வது குடிநீர் திட்டத்தின் பிரதான குழாய்களில் ஏற்பட்டுள்ள சேதங்கள் சரி செய்யும் பணி மேற்கொள்ளப்பட்டுள்ளது. இதனால் இன்றும், நாளையும் (5மற்றும் 6ம் தேதி) பின்வரும் பகுதிகளில் குடிநீர் வினியோகம் முற்றிலும் தடைபடும்.

1 வது மண்டலம்: வார்டுகள் 8,9,10,12 மற்றும் 13, இரண்டாவது மண்டலம், 20 மற்றும் 22 முதல் 30 வார்டு வரை. மூன்றாவது மண்டலம், 31,32 மற்றும் 40 முதல் 45 வார்டு வரை, நான்காவது மண்டலம் வார்டுகள் 46 முதல் 51 வரை மற்றும் 56 ஆகிய வார்டுகள்.

எனவே பொதுமக்கள் குடிநீரை சிக்கனமாகவும், சேமித்தும் பயன்படுத்த வேண்டும். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News