செய்திகள்
மணல்

தஞ்சையில் மணல் கடத்தல்- 2 பேர் கைது

Published On 2021-10-30 11:54 GMT   |   Update On 2021-10-30 11:54 GMT
தஞ்சையில் மணல் கடத்திய 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:

தஞ்சை -நாகை பைபாஸ் சாலை பகுதியில் தஞ்சை தாலுகா போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் ராஜ்கமல், சிறப்பு சப்-இன்ஸ்பெக்டர் முத்துவேல் மற்றும் ஏட்டு சாந்தகுமார் ஆகியோர் சோதனைப்பணியில் ஈடுபட்டு இருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த சரக்கு வேனை நிறுத்தி சோதனை செய்தனர். அதில் மணல் கடத்தி வந்தது தெரிய வந்தது. இதையடுத்து தாலுகா போலீசார் வழக்குப்பதிவு செய்து மேலதிருப்பூந்துருத்தியை சேர்ந்த வேல்முருகன் (24), குருங்கலூரை சேர்ந்த டிரைவர் வினோத் (24) ஆகிய இருவரையும் கைது செய்தனர். மேலும் மணல் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு வேனையும் பறிமுதல் செய்தனர்.
Tags:    

Similar News