செய்திகள்
விபத்து

வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் -கார் மோதி டீ மாஸ்டர் பலி

Published On 2021-10-29 10:01 GMT   |   Update On 2021-10-29 10:01 GMT
மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மோட்டார் சைக்கிள் மீது கார் மோதிய விபத்தில் டீ மாஸ்டர் பரிதாபமாக உயிரிழந்தார்.
வாடிப்பட்டி:

மதுரை மாவட்டம் வாடிப்பட்டி அருகே மேட்டு நீரேத்தான் கிருஷ்ணன் கோவில் தெருவை சேர்ந்தவர் மலைச்சாமி (வயது 44) கட்டக்குளம் பிரிவு எதிரே உள்ள பேக்கரியில் டீ மாஸ்டராக வேலை பார்த்து வந்தார்.

இவருடன் அதே கடையில் கேஷியராக நீரேத்தானை சேர்ந்த ராமச்சந்திரன் (62) உள்ளார். நேற்று இரவு வழக்கம் போல் வேலை முடித்துவிட்டு 2 பேரும் ஒரே மோட்டார் சைக்கிளில் வீட்டுக்கு புறப்பட்டனர்.

கட்டக்குளம் பிரிவில் ரோட்டை கடக்க முயன்ற போது எதிர்பாராதவிதமாக மதுரையிலிருந்து திண்டுக்கல் நோக்கி சென்ற கார் மோட்டார் சைக்கிள் மீது மோதியது.

இதில் தூக்கிவீசப்பட்ட மலைச்சாமி தலையில் அடிபட்டு ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே இறந்தார். படுகாயமடைந்த ராமச்சந்திரன் மதுரை அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டார்.

இது சம்பந்தமாக வாடிப்பட்டி போலீஸ் இன்ஸ்பெக்டர் கனக சபாபதி, சப்-இன்ஸ்பெக்டர் முருகேசன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து கரூரை சேர்ந்த கார் டிரைவர் சேகர் (44)என்பவரை கைது செய்து விசாரித்து வருகிறார்கள்.
Tags:    

Similar News