செய்திகள்
நாசரேத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மாயம்
நாசரேத்தில் காதல் திருமணம் செய்த புதுப்பெண் மாயமான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
நாசரேத்:
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடலை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 28). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் வீரநாகு (21) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த 19-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு நாசரேத் என்.டி.என். தெருவில் குடியேறினர். கடந்த 23-ந் தேதி வேலை தேடி செல்வதாக ஜஸ்டின் நெல்லை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீரநாகுவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
சாத்தான்குளம் அருகே உள்ள கருங்கடலை சேர்ந்தவர் ஜஸ்டின் (வயது 28). இவர் திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் உள்ள ஒரு தனியார் கம்பெனியில் வேலை பார்த்து வருகிறார். அதே கம்பெனியில் வீரநாகு (21) என்பவரும் வேலை பார்த்தார். அப்போது அவர்களுக்கு பழக்கம் ஏற்பட்டு காதலாக மாறியது.
கடந்த 19-ந் தேதி இருவரும் திருமணம் செய்து கொண்டு நாசரேத் என்.டி.என். தெருவில் குடியேறினர். கடந்த 23-ந் தேதி வேலை தேடி செல்வதாக ஜஸ்டின் நெல்லை சென்றார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டில் இருந்த வீரநாகுவை காணவில்லை. அக்கம் பக்கம் உள்ளிட்ட பல்வேறு இடங்களில் தேடியும் அவர் கிடைக்கவில்லை. இது தொடர்பான புகாரின்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.