செய்திகள்
பல்லடம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் மனு கொடுத்த போது எடுத்த படம்.

பல்லடத்தில் விவசாய தொழிலாளர்கள் ஆர்ப்பாட்டம்

Published On 2021-10-28 08:54 GMT   |   Update On 2021-10-28 08:54 GMT
100 நாள் வேலை நாட்களை 150 நாட்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டது.
பல்லடம்:

அகில இந்திய விவசாய தொழிலாளர் சங்கம் சார்பில் பல்லடம் ஒன்றிய அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

100 நாள் வேலை தொழிலாளர்களுக்கு சம்பள பாக்கியை  உடனே வழங்க வேண்டும், சாதிவாரியாக சம்பளம் வழங்குவதை கைவிடவேண்டும், 100  நாள் வேலை தொழிலாளர்களுக்கு கூலியை உயர்த்தி வழங்க வேண்டும், 100 நாள் வேலை நாட்களை 150 நாட்கள் ஆக உயர்த்தி வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. பின்னர் வட்டார வளர்ச்சி துணை அலுவலரிடம் கோரிக்கை மனு அளித்தனர்.
Tags:    

Similar News