செய்திகள்
மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.54 லட்சம் உண்டியல் காணிக்கை

மதுரை மீனாட்சி அம்மன் கோவிலில் ரூ.54 லட்சம் உண்டியல் காணிக்கை

Published On 2021-10-28 03:43 GMT   |   Update On 2021-10-28 03:43 GMT
அனைத்து கோவில்களில் உள்ள உண்டியல்கள் திறந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.
மதுரை மீனாட்சி அம்மன் கோவில் மற்றும் உபகோவில்களில் உள்ள உண்டியல்கள் ஒவ்வொரு மாதமும் திறந்து எண்ணப்படும். அதன்படி இந்த மாதத்திற்கான உண்டியல் திறப்பு நிகழ்ச்சி நேற்று நடந்தது. அனைத்து கோவில்களில் உள்ள உண்டியல்கள் திறந்து மதுரை மீனாட்சி அம்மன் கோவில் உள்ள பழைய திருக்கல்யாண மண்டபத்தில் வைத்து எண்ணப்பட்டன.

அதில் 54 லட்சத்து 38 ஆயிரத்து 266 ரூபாய் மற்றும் 323 கிராம் தங்கமும், 815 கிராம் வெள்ளியும் காணிக்கையாக கிடைத்தன. கோவில் இணை கமிஷனர் செல்லத்துரை தலைமையில் நடந்து இந்த பணியில் உதவி கமிஷனர் விஜயன், கோவில் பணியாளர்கள், வங்கி அலுவலர்கள் என பலர் கலந்து கொண்டனர்.
Tags:    

Similar News