செய்திகள்
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு
தர்மபுரியில் மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
தர்மபுரி:
மதுரையை சேர்ந்தவர் ஷேக் அப்துல்லா (வயது 24). இவர் தர்மபுரி டேக்கீஸ்பேட்டை பகுதியில் உள்ள ஒரு வீட்டில் தங்கி இருந்தார். சம்பவத்தன்று இவர் தனது மோட்டார் சைக்கிளை வீட்டின் முன்பு நிறுத்தி இருந்தார். அவருடைய மோட்டார் சைக்கிள் திருட்டு போனது. இதுகுறித்து ஷேக்அப்துல்லா தர்மபுரி டவுன் போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மோட்டார் சைக்கிள் திருட்டில் ஈடுபட்ட மர்ம நபர்கள் யார்? என்பது குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.