செய்திகள்
கமல் ஹாசன்

கமல் ஹாசனுடன் கார் தொழிற்சாலை ஊழியர்கள் சந்திப்பு

Published On 2021-10-27 19:57 GMT   |   Update On 2021-10-27 19:57 GMT
கமல் ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார்.
சென்னை:

உலகப்புகழ் பெற்ற அமெரிக்க கார் நிறுவனமான போர்டு நிறுவனம், தனது உற்பத்தி பிரிவை இந்தியாவில் சென்னையில் நிறுவி உற்பத்தி செய்து வந்தது. பின்னர் அதன் விரிவாக்கத்தின் ஒரு பகுதியாக, மேலும் ஒரு பிரிவை குஜராத்தில் தொடங்கியது. அதன் மூலம் தமிழகத்திலும், குஜராத்திலும் பல்லாயிரக்கணக்கானோர் வேலைவாய்ப்பு பெற்றிருந்தனர்.

இந்த நிலையில், போர்டு நிறுவனம் தனது இந்திய நிறுவனங்களை மூடுவதாக அறிவித்தது. பெரும் வேலை இழப்பை ஏற்படுத்தும் இந்த நடவடிக்கையை, மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் கண்டித்து குரல்கொடுத்தார்.

அதற்கு நன்றி தெரிவிக்கும் நோக்கில், அந்த நிறுவன பணியாளர்கள் கமல்ஹாசனை நேரில் சந்தித்தனர். அவர்களிடம், கமல்ஹாசன் போர்டு நிறுவனத்தை தக்கவைக்க, தான் மேலும் முயற்சி செய்வதாக கூறினார்.

மேற்கண்ட தகவல் மக்கள் நீதி மய்யம் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு உள்ளது.

Tags:    

Similar News