செய்திகள்
கோப்பு படம்

நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல்: நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியல் வெளியீடு

Published On 2021-10-27 19:28 GMT   |   Update On 2021-10-27 19:41 GMT
நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது.
திருச்சி:

திருச்சி, புதுக்கோட்டை, அரியலூர், பெரம்பலூர், நாகப்பட்டினம், தஞ்சை, திருவாரூர், மயிலாடுதுறை ஆகிய 8 மாவட்டங்களில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் ஆயத்தப்பணிகள் குறித்து மண்டல அளவிலான ஆய்வுக்கூட்டம் மற்றும் தேர்தல் அலுவலர்களுக்கான பயிற்சி திருச்சி கலையரங்கில் நேற்று நடைபெற்றது. கூட்டத்துக்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் வெ.பழனிகுமார் தலைமை தாங்கி பேசுகையில், நகர்ப்புற உள்ளாட்சி தேர்தலையொட்டி வரும் 1-ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட உள்ளது. இதனை வைத்து கொண்டு நவம்பர் 25-ந்தேதி இறுதி வாக்காளர் பட்டியலை வெளியிட வேண்டும். குறுகிய காலமே இருப்பதால் சவாலான இந்த பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என்றார்.
Tags:    

Similar News