செய்திகள்
தஞ்சையில் வாலிபரை தாக்கிய 3 பேர் கைது
தஞ்சையில் வாலிபரை தாக்கிய 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை வடக்குவாசல் பகுதியை சேர்ந்தவர் மாசிலாமணி மகன் அப்பு என்கிற மணிவேலன் (வயது20). சம்பவத்தன்று இவர் வடக்குவாசல் பகுதியில் சென்றபோது வடக்குவாசல் கங்காநகரை சேர்ந்த மெக்கானிக் சந்துரு என்கிற சந்தோஷ்(21), முருகையன் மகன் டிரைவர் வெங்கடேசன், ஜெயசீலன் மகன் அஜய்பிரகாஷ் (20) ஆகிய 3 பேரும் மது போதையில் மணிவேலனிடம் தகராறு செய்துள்ளனர்.
இதில் வாக்குவாதம் எழுந்ததில் மணிவேலனை சந்துரு உட்பட 3 பேரும் தாக்கி உள்ளனர். காயமடைந்த மணிவேலன் தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். இதுகுறித்த புகாரின் பேரில் தஞ்சை மேற்கு போலீஸ் இன்ஸ்பெக்டர் சந்திரா, சப்-இன்ஸ்பெக்டர் அருள்குமார் மற்றும் போலீசார் வழக்குபதிவு செய்து சந்துரு உட்பட 3 பேரையும் கைது செய்தனர்.