செய்திகள்
மிகப்பெரிய கல்விப் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது -மு.க.ஸ்டாலின் பேச்சு
அனைவருக்கும் கல்வி என்பது திராவிட இயக்கத்தின் நோக்கம் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கூறினார்.
மரக்காணம்:
மாணவர்களின் கற்றல் இடைவெளி மற்றும் கற்றல் இழப்பை குறைக்கும் வகையில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை மரக்காணம் முதலியார்குப்பத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று துவக்கி வைத்தார். அப்போது அவர் பேசியதாவது:-
இன்று மிகப்பெரிய கல்விப் புரட்சி தொடங்கப்பட்டுள்ளது. கொரோனாவால் அதிகம் பாதிக்கப்பட்டது மாணவர்கள்தான். மேலும் படிப்பின் ஆர்வத்தை குறைத்துவிட்டது கொரோனா. நடந்தது நடந்ததாக இருக்கட்டும், இனி நடப்பது நல்லதாக இருக்கட்டும்.
‘இல்லம் தேடி கல்வி’ பிற மாநிலங்களுக்கு முன்னுதாரணமாக இருக்கும். அனைவருக்கும் கல்வி என்பது திராவிட இயக்கத்தின் நோக்கம். இது கட்சியின் ஆட்சி அல்ல; இனத்தின் ஆட்சி. வீட்டிற்கு அருகிலேயே இத்திட்டத்திற்கு தனியாக இடம் தேர்வு செய்யப்படும்.
இவ்வாறு அவர் பேசினார்.