செய்திகள்
நிலக்கோட்டையில் குழந்தையிடம் நகை திருடிய பெண் கைது
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டையில் குழந்தையிடம் நகை திருடியது தொடர்பாக பெண்ணை கைது செய்த போலீசார் அவரை மகளிர் சிறையில் அடைத்தனர்.
நிலக்கோட்டை:
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி பாண்டிச்செல்வி (வயது 27). இவரது 2 வயது மகன் ஹரித் வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி வெண்ணிலா (36) என்பவர் சிறுவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் அளவில் உள்ள தங்க தாயத்தை நைசாக திருடி கொண்டார்.
உடனடியாக குழந்தை அழுகை சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் இருந்து ஓடி வந்த பாண்டிச்செல்வி கையும், களவுமாக வெண்ணிலாவிடம் இருந்த தங்கத் தாயத்தை மீட்டு கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்படி வெண்ணிலாவை கைது செய்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்தனர்.
திண்டுக்கல் மாவட்டம் நிலக்கோட்டை நாகம்மாள் கோவில் தெருவைச் சேர்ந்த சண்முகசுந்தரம் மனைவி பாண்டிச்செல்வி (வயது 27). இவரது 2 வயது மகன் ஹரித் வீட்டில் முன்பு விளையாடிக்கொண்டிருந்தான். அப்போது அப்பகுதியைச் சேர்ந்த தங்கவேல் மனைவி வெண்ணிலா (36) என்பவர் சிறுவனின் கழுத்தில் அணிந்திருந்த ஒரு கிராம் அளவில் உள்ள தங்க தாயத்தை நைசாக திருடி கொண்டார்.
உடனடியாக குழந்தை அழுகை சத்தம் கேட்டு வீட்டின் மாடியில் இருந்து ஓடி வந்த பாண்டிச்செல்வி கையும், களவுமாக வெண்ணிலாவிடம் இருந்த தங்கத் தாயத்தை மீட்டு கைப்பற்றினார். இதனைத் தொடர்ந்து நிலக்கோட்டை போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தயாநிதியிடம் பாண்டிச்செல்வி கொடுத்த புகாரின்படி வெண்ணிலாவை கைது செய்து நிலக்கோட்டை மகளிர் சிறையில் அடைத்தனர்.