செய்திகள்
கைது

அவனியாபுரம் டாஸ்மாக் கடையை உடைத்து திருடிய வாலிபர்கள் கைது

Published On 2021-10-27 10:37 GMT   |   Update On 2021-10-27 10:37 GMT
மதுரை அவனியாபுரம் டாஸ்மாக் கடையை உடைத்து மதுபாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டது தொடர்பாக வாலிபர்களை போலீசார் கைது செய்தனர்.
அவனியாபுரம்:

மதுரை அவனியாபுரம், சந்தோஷ் நகரில் உள்ள டாஸ்மாக் கடையை உடைத்து ரூ.35 ஆயிரம் மதிப்புள்ள மது பாட்டில்கள் கொள்ளையடிக்கப்பட்டன.

இது குறித்து பணியாளர் இளையராஜா அவனியாபுரம் போலீசில் புகார் செய்தார். அதன் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இன்ஸ்பெக்டர் பிரபு, சப்-இன்ஸ்பெக்டர்கள் ஜெயபாண்டியன், சேதுராமன் ஆகியோர் தலைமையில் போலீசார் வாகன சோதனையில் ஈடுபட்டனர்.

அவனியாபுரம், வைக்கம் பெரியார் நகர் பகுதியில் இருந்து மோட்டார் சைக்கிளில் வந்த 2 வாலிபர்கள், போலீசாரை கண்டதும் வாகனத்தை திருப்பி ஓட்டி முயன்றனர். போலீசார் அவர்களை துரத்திச்சென்று மடக்கிப் பிடித்தனர்.

அவர்களிடம் நடத்திய விசாரணையில், அவனியாபுரம் வள்ளலானந்த புரத்தைச் அருண்பாண்டி (22), ஜெ.ஜெ.நகர் மருது பாண்டி (20), சிவா (18) மற்றும் 17 வயது சிறுவன் ஆகியோர் சந்தோஷ்நகர் மதுக்கடையில் திருடியது தெரிய வந்தது.

இதையடுத்து 4 பேரையும் போலீசார் கைது செய்தனர்.
Tags:    

Similar News