செய்திகள்
தஞ்சை அருகே கஞ்சா விற்ற தாய்-மகன் கைது
தஞ்சை அருகே கஞ்சா விற்ற தாய்-மகனை கைது செய்த போலீசார் அவர்களிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.
தஞ்சை:
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மூலிகை பண்ணை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது மூலிகை பண்ணை அருகே இருவர் போலீசை கண்டதும் கஞ்சாவை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மாரியம்மன் கோவிலை சேர்ந்த மதி, மனைவி மகேஸ்வரி (42) மகன் அரவிந்தன் (22), என்பதும் தெரியவந்தது அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி மூலிகை பண்ணை அருகே கஞ்சா விற்பனை நடைபெறுவதாக தஞ்சாவூர் மருத்துவக்கல்லூரி இன்ஸ்பெக்டர் பிராங்கிளின் உட்ரோ வில்சனுக்கு ரகசிய தகவல் வந்துள்ளது. அதன்படி அங்கு விரைந்து சென்ற போலீசார் அப்பகுதியில் தீவிர சோதனை நடத்தினர்.
அப்போது மூலிகை பண்ணை அருகே இருவர் போலீசை கண்டதும் கஞ்சாவை அங்கேயே போட்டுவிட்டு தப்ப முயன்றனர். போலீசார் அவர்களை பிடித்து விசாரணை செய்ததில் மாரியம்மன் கோவிலை சேர்ந்த மதி, மனைவி மகேஸ்வரி (42) மகன் அரவிந்தன் (22), என்பதும் தெரியவந்தது அவரிடமிருந்து 8 கிலோ கஞ்சாவை போலீசார் பறிமுதல் செய்து 2 பேரையும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.