செய்திகள்
விஷம்

கங்கைகொண்டான் அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை

Published On 2021-10-27 09:49 GMT   |   Update On 2021-10-27 09:49 GMT
கங்கைகொண்டான் அருகே விவசாயி வி‌ஷம் குடித்து தற்கொலை செய்து கொண்டது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:

கங்கைகொண்டானை அடுத்த கங்கணாகிணறு பகுதியை சேர்ந்தவர் பாண்டியராஜ் (வயது 33). விவசாயி. இவருக்கு கடந்த 4 வருடங்களுக்கு முன் திருமணமாகி ஒரு பெண் குழந்தை உள்ளது. இந்நிலையில் கணவன்- மனைவிக்கிடையே ஏற்படும் குடும்ப தகராறு காரணமாக மனைவி பிரிந்து சென்று விட்டார். இதனிடையே உடல்நிலை சரியில்லாமல் இருந்த பாண்டிராஜ் கடந்த 24-ந்தேதி வி‌ஷத்தை குடித்து மயங்கி விழுந்தார்.

அவரை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக பாளை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி இன்று அதிகாலை பாண்டியராஜ் பரிதாபமாக இறந்தார். இது குறித்து கயத்தார் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News