செய்திகள்
மரக்காணம் அருகே அரசு பள்ளியில் மு.க.ஸ்டாலின் ஆய்வு
அரசு பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவு குறித்து ஆய்வு செய்த முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் அதன் பின்னர் அங்கிருந்து காரில் மரக்காணம் முதலியார் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார்.
மரக்காணம்:
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் இன்று மாலை இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக இன்று காலை மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மரக்காணத்துக்கு காரில் புறப்பட்டார். இன்று மதியம் மரக்காணம் அருகே கடபாக்கத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் மரக்காணம் முதலியார் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார்.
மரக்காணம் பஸ் நிறுத்தம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் பொன் கவுதமசிகாமணி, ரவிக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
விழுப்புரம் மாவட்டம் மரக்காணம் முதலியார் குப்பத்தில் இன்று மாலை இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதற்காக இன்று காலை மு.க.ஸ்டாலின் சென்னையில் இருந்து மரக்காணத்துக்கு காரில் புறப்பட்டார். இன்று மதியம் மரக்காணம் அருகே கடபாக்கத்துக்கு வந்தார். பின்னர் அந்த பகுதியில் உள்ள அரசு உதவிபெறும் பள்ளிக்கு முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்று திடீர் ஆய்வு மேற்கொண்டார்.
பள்ளி மாணவர்களுக்கு அளிக்கப்படும் மதிய உணவையும் ஆய்வு செய்தார். அதன் பின்னர் அங்கிருந்து காரில் மரக்காணம் முதலியார் குப்பத்துக்கு புறப்பட்டு சென்றார்.
மரக்காணம் பஸ் நிறுத்தம் அருகே முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு அமைச்சர்கள் பொன்முடி, செஞ்சி மஸ்தான், எம்.பி.க்கள் பொன் கவுதமசிகாமணி, ரவிக்குமார் மற்றும் எம்.எல்.ஏ.க்கள், கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் திரண்டு சிறப்பான வரவேற்பு அளித்தனர்.
பின்னர் அவருக்கு பொன்னாடை அணிவித்து, பூங்கொத்து வழங்கினர். அதன் பின்னர் அங்கிருந்து புறப்பட்டு மரக்காணம் கூணிமேடு பகுதியில் உள்ள தனியார் ஓட்டலுக்கு சென்று முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் உணவு அருந்தினார். அங்கு சிறிதுநேரம் ஓய்வு எடுத்த பின்னர் மாலையில் மரக்காணம் முதலியார்குப்பத்தில் இல்லம் தேடி கல்வி திட்டத்தை முதல்- அமைச்சர் மு.க.ஸ்டாலின் தொடங்கி வைக்கிறார்.
இதையும் படியுங்கள்... பணியிடங்களை நிரப்ப வலியுறுத்தி உ.பி. முதல்வருக்கு ரத்தத்தில் கடிதம் எழுதிய இளைஞர்கள்