செய்திகள்
தற்கொலை

கபிலர்மலை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை

Published On 2021-10-26 16:20 GMT   |   Update On 2021-10-26 16:20 GMT
கபிலர்மலை அருகே தொழிலாளி விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பரமத்திவேலூர்:

கபிலர்மலை அருகே உள்ள இருகூரைச் சேர்ந்தவர் செல்வமணி. இவருடைய மகன் கவின் (வயது 21). கூலித்தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் உள்ளதாக கூறப்படுகிறது.

இதனால் கவின் அடிக்கடி மது குடித்து விட்டு வீட்டிற்கு வந்ததை தாய் சாந்தி கண்டித்தாக தெரிகிறது. இதனால் மனமுடைந்த கவின் விஷம் குடித்து மயங்கினார்.

இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த தாய் சாந்தி மகனை மீட்டு வேலூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தார். பின்னர் மேல்சிகிச்சைக்காக நாமக்கல் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இரவு கவின் உயிரிழந்தார்.

இதுகுறித்து பரமத்தி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.
Tags:    

Similar News