செய்திகள்
கைது

திருவையாறு அருகே மது விற்ற பெண் கைது

Published On 2021-10-26 15:21 GMT   |   Update On 2021-10-26 15:21 GMT
திருவையாறு அருகே மது விற்ற பெண்ணை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திருவையாறு:

திருவையாறு அருகே உள்ள கருப்பூர் மெயின்ரோடு பகுதியை சேர்ந்த துரைக்கண்ணு மனைவி சகுந்தலா (வயது48). இவர் கருப்பூர் பஸ் நிறுத்தத்தின் பின்புறம் மதுபாட்டில்களை விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. அதன்பேரில் நடுக்காவேரி போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் தீபநாதன் மற்றும் போலீசார் அங்கு சென்று சகுந்தலாவை கைது செய்தனர். மேலும் இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரிடம் இருந்து 25 மது பாட்டில்களை கைப்பற்றினர்.
Tags:    

Similar News