செய்திகள்
திருட்டு

பேரையூர் அருகே வீட்டு பீரோவை உடைத்து நகை திருட்டு

Published On 2021-10-26 15:17 GMT   |   Update On 2021-10-26 15:17 GMT
பேரையூர் அருகே வீட்டு பீரோவை உடைத்து நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பேரையூர்:

பேரையூர் அருகே உள்ள சின்னபூலாம்பட்டியை சேர்ந்தவர் ராமசாமி இவரது மனைவி சாந்தலட்சுமி (வயது 36). சம்பவத்தன்று சாந்தலட்சுமி வீட்டை பூட்டிவிட்டு விவசாய வேலைக்கு சென்று விட்டார். பின்னர் மாலையில் வீட்டுக்கு வந்து பார்த்தபோது வீடு திறந்து கிடந்தது. வீட்டின் உள்ளே இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த 3 பவுன் நகை திருட்டு போயிருந்தது. இதுகுறித்து சாந்தலட்சுமி பேரையூர் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து நகையை திருடிச் சென்ற மர்ம நபரை தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News