செய்திகள்
குளித்தலை அருகே மது விற்ற 3 பேர் கைது
குளித்தலை அருகே மது விற்ற 3 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
குளித்தலை:
குளித்தலை அருகே சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாக போலீசாருக்கு பல்வேறு புகார் வந்தது. இதன்பேரில் குளித்தலை போலீசார் ரோந்து சென்றனர். அப்போது புதுப்பாளையத்தில் தனது வீட்டின் அருகே வைத்து மது விற்ற இளங்கோவன் (வயது 48), ராஜேந்திரம் கீழக்குடி தெருவை சேர்ந்த சங்கர் (40), மேலகுட்டப்பட்டியை சேர்ந்த லோகநாதன் (35) ஆகிய 3 பேரையும் போலீசார் கைது செய்தனர். மேலும் இவர்களிடம் இருந்து மொத்தம் 47 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன.