செய்திகள்
பொம்மிடி அருகே முதியவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
பொம்மிடி:
பொம்மிடி அருகே பி.துரிஞ்சிபட்டியை சேர்ந்த ராமசாமி மகன் சின்னப்பன் (வயது 72). இவர், வயது முதிர்வு காரணமாக எந்த வேலையும் செய்ய முடியாமல் மனம் உடைந்து காணப்பட்டதாக கூறப்படுகிறது. இதனால் வீட்டில் இருந்த பூச்சிக்கொல்லி மருந்தை எடுத்து குடித்து விட்டார். மயங்கி கிடந்த அவரை மீட்டு தர்மபுரி அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து பொம்மிடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.