செய்திகள்
பட்டா நிலத்தில் குடிசை அமைக்க முயன்ற 204 பேர் மீது வழக்கு
பஞ்சமி நிலம் எனக் கூறி நேற்று முன்தினம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடிசை போட முயன்றனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ள பொங்கலூர் ஒன்றியம் அலகுமலை கோவில் அடிவாரத்தில், தனியாருக்குச் சொந்தமான பட்டா நிலம் உள்ளது. இது பஞ்சமி நிலம் எனக்கூறி நேற்று முன்தினம் சுமார் 200க்கும் மேற்பட்டோர் குடிசை போட முயன்றனர்.
இதனை இடத்தின் உரிமையாளர்கள் எதிர்த்தனர். இரு தரப்புக்கும் மோதல் ஏற்படும் சூழ்நிலையில், பல்லடம் டி.எஸ்.பி வெற்றிச்செல்வன், திருப்பூர் தெற்கு தாசில்தார் ராஜ்குமார் உள்ளிட்ட அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி கலைந்து போகச் செய்தனர்.
இந்த நிலையில் தனியாரது பட்டா நிலத்தில், அத்துமீறி குடிசை அமைக்க முயன்றதாக மசநல்லாம்பாளையத்தை சேர்ந்த ராசு, மலைப்பாளையத்தை சேர்ந்த பழனிச்சாமி உள்ளிட்ட 204 பேர் மீது அவிநாசிபாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.