செய்திகள்
பல்லடம் கிளைச்சிறையில் சட்ட விழிப்புணர்வு நிகழ்ச்சி
பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அரிராம் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.
பல்லடம்:
தேசிய சட்டப் பணிகள் ஆணைக்குழுவின் 25 - வது வெள்ளி விழாவை முன்னிட்டு பல்லடம் வட்ட சட்டப்பணிகள் குழு, பல்லடம் கிளைச் சிறை நிர்வாகம் சார்பில் சட்ட விழிப்புணர்வு குறித்து சிறைவாசிகளுக்கான விழிப்புணர்வு நிகழ்ச்சி கிளைச்சிறை வளாகத்தில் நடைபெற்றது.
இதில் பல்லடம் குற்றவியல் நடுவர் நீதிமன்ற நீதிபதி அரிராம் சட்ட விழிப்புணர்வு குறித்து விளக்கி பேசினார்.
இந்த நிகழ்ச்சியில் சிறைத்துறை அதிகாரிகள் வழக்கறிஞர்கள், சிறைவாசிகள் கலந்து கொண்டனர்.