செய்திகள்
கோப்புபடம்.

திருப்பூரில் நாளை நடக்கிறது - வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம்

Published On 2021-10-26 06:55 GMT   |   Update On 2021-10-26 06:55 GMT
திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெறும் இந்த முகாமை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் சார்பில் வாடிக்கையாளர்கள் தொடர்பு முகாம் நாளை 27 - ந்தேதி நடைபெறுகிறது. 

இதுகுறித்து திருப்பூர்  மாவட்ட கலெக்டர் வினீத் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

திருப்பூர் மாவட்ட முன்னோடி வங்கி, அனைத்து வங்கிகள் ஆகியன சார்பில் வாடிக்கையாளர் தொடர்பு முகாம் நாளை 27 - ந்தேதி ( புதன்கிழமை ) காலை 9 மணி அளவில் தொடங்கி மாலை 6 மணி வரையில் நடைபெறுகிறது.

திருப்பூர் காங்கயம் சாலையில் உள்ள காயத்ரி மஹாலில் நடைபெறும் இந்த முகாமை செய்தித் துறை அமைச்சர் மு.பெ.சாமிநாதன், ஆதிதிராவிடர் நலத் துறை அமைச்சர் என்.கயல்விழி செல்வராஜ் ஆகியோர் தொடங்கி வைக்கின்றனர் .

இதில், மத்திய, மாநில அரசின் மானியத்துடன் கூடிய கடன் திட்டங்கள், சமூகப் பாதுகாப்பு திட்டங்கள் குறித்த விவரங்கள், ஆலோசனைகள் மற்றும் முகாமில் பெறக்கூடிய கடன் விண்ணப்பங்களை பரிசீலனை செய்து தகுதியானவர்களுக்கு அனுமதி கடிதம் வழங்குவதற்காக அரசு மற்றும் வங்கித்துறையை சார்ந்தவர்களுக்கு 50 அரங்குகள் அமைக்கப்பட்டுள்ளது. 

மேலும் விவசாயக்கடன், சிறு, குறு தொழிற்கடன், வாகனக்கடன், கல்விக்கடன் மற்றும் அடமானக்கடன் உள்ளிட்ட அனைத்து வகையான தகவல்களையும் பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
Tags:    

Similar News