செய்திகள்
மின்சார நிறுத்தம்

பகண்டை கூட்டுரோடு பகுதியில் நாளை மின் நிறுத்தம்

Published On 2021-10-25 15:23 GMT   |   Update On 2021-10-25 15:23 GMT
ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை(செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது.
ரிஷிவந்தியம்:

ரிஷிவந்தியம் அடுத்த அரியலூர் துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்பு காரணமாக நாளை(செவ்வாய்க் கிழமை) காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின் நிறுத்தம் செய்யப்பட உள்ளது. இதன் காரணமாக அரியலூர், அத்தியூர் தொழுவந்தாங்கல், கடுவனூர், பெரிய கொள்ளியூர், மாமந்தூர், ஈருடையாம்பட்டு, சின்ன கொள்ளியூர், அருளம்பாடி, சுத்தமலை, வாணாபுரம், ஓடியந்தல், சீர்ப்பனந்தல், இளையனார்குப்பம், ஜம்படை, திருவரங்கம், கள்ளிப்பாடி, பகண்டை கூட்டுரோடு, கடம்பூர், மையனூர், யால், பெரிய பகண்டை, ஏந்தல் ஆகிய கிராமங்களில் மின்சார வினியோகம் இருக்காது. இந்த தகவலை தமிழ்நாடு மின் உற்பத்தி மற்றும் பகிர்மான கழகத்தின் சங்கராபுரம் செயற்பொறியாளர் ரகுராமன் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News