செய்திகள்
கைது

ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற வாலிபர் கைது

Published On 2021-10-25 14:04 GMT   |   Update On 2021-10-25 14:04 GMT
ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் விற்ற வாலிபரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
ஜோலார்பேட்டை:

ஜோலார்பேட்டை பகுதியில் சாராயம் மற்றும் வெளிமாநில மதுபானம் விற்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இன்ஸ்பெக்டர் மங்கையர்கரசி தலைமையில் போலீசார் நேற்று தீவிர ரோந்துப்பணியில் ஈடுபட்டனர். தாமலேரிமுத்தூர் பஸ் நிறுத்தம் அருகில் சாராயம் விற்றவரை பிடித்து விசாரித்தனர்.

அவர், ஆந்திர மாநிலம் சித்தூர் மாவட்டம் குப்பத்தைச் சேர்ந்த சின்ன குழந்தையின் மகன் பிரசாந்த் (வயது 24) எனத் தெரிய வந்தது. அவரை போலீசார் கைது செய்தனர். அவரிடம் இருந்து 55 லிட்டர் சாராயம் பறிமுதல் செய்யப்பட்டது. ஜோலார்பேட்டை போலீசார் வழக்குப்பதிவு செய்து பிரசாந்தை திருப்பத்தூர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News