செய்திகள்
திருட்டு

பெரியாம்பட்டி அருகே பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு

Published On 2021-10-25 09:52 GMT   |   Update On 2021-10-25 09:52 GMT
பெரியாம்பட்டி அருகே பஸ்சில் பெண்ணிடம் 5 பவுன் நகை திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
காரிமங்கலம்:

காரிமங்கலத்தை சேர்ந்தவர் சுகேந்திரன். இவரது மனைவி லட்சுமி (வயது55). இவர் காரிமங்கலத்தில் இருந்து தர்மபுரிக்கு அரசு பஸ்சில் சென்றார். அப்போது பெரியாம்பட்டி அருகே சென்ற போது லட்சுமி கழுத்தில் அணிந்திருந்த 5 பவுன் தங்க சங்கிலியை மர்ம நபர்கள் திருடி சென்றனர். இதுகுறித்த புகாரின் பேரில் காரிமங்கலம் போலீசார், நகையை திருடிச்சென்ற மர்ம நபர்கள் குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News