செய்திகள்
அதிமுகவில் சசிகலாவை சேர்ப்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் முடிவு எடுப்பார்கள்- ஓ.பன்னீர்செல்வம்
சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் மாறுபட்ட கருத்து சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
சென்னை:
இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த மாறுபட்ட கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக செயல்படுகிறது. அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
அதிமுகவில் சசிகலாவுக்கு இடமில்லை என்று முன்னாள் முதல் அமைச்சரும், அதிமுக இணை ஒருங்கிணைப்பாளருமான எடப்பாடி பழனிசாமி மற்றும் முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் ஆகியோர் பல்வேறு பேட்டிகளில் தங்களது கருத்தை காட்டமாக பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், சசிகலாவை அதிமுக கட்சியில் இணைப்பது தொடர்பாக கழகத்தின் தலைமை நிர்வாகிகள் முடிவு செய்வார்கள் என்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். எடப்பாடி பழனிசாமி மற்றும் ஓ.பன்னீர்செல்வம் ஆகியோரின் இந்த மாறுபட்ட கருத்தால் கட்சியில் சலசலப்பு ஏற்படுத்தி உள்ளது.
இதுகுறித்து அதிமுகவின் ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியிருப்பதாவது:-
ஒருங்கிணைப்பாளர், இணை ஒருங்கிணைப்பாளர் என்ற அடிப்படையிலேயே அதிமுக செயல்படுகிறது. அரசியலில் யார் வேண்டுமானாலும் வரலாம். ஏற்றுக்கொள்வது மக்களின் விருப்பம். சசிகலாவை அதிமுக ஏற்றுக்கொள்ளுமா என்பது குறித்து தலைமை கழக நிர்வாகிகள் ஆலோசித்து முடிவு எடுப்பார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படியுங்கள்...1-ந்தேதி பள்ளிகள் திறப்பு: பழைய பஸ்பாஸ் காட்டி மாணவர்கள் பயணம் செய்யலாம் - போக்குவரத்து துறை