செய்திகள்
திண்டுக்கல் அருகே ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தியவர் கைது
திண்டுக்கல் அருகே ஸ்கூட்டரில் மதுபானம் கடத்தியவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
திண்டுக்கல்:
திண்டுக்கல் நகர் பகுதியில் வடக்கு போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது ஜி.டி.என். சாலையில் ஸ்கூட்டரில் வந்தவரை தடுத்து நிறுத்தி போலீசார் சோதனையிட்டனர். அப்போது ஸ்கூட்டரின் இருக்கைக்கு அடியில் 7 மதுபாட்டில்களை மறைத்து வைத்திருந்தது போலீசாருக்கு தெரியவந்தது. இதையடுத்து அவரிடம் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர் திண்டுக்கல்லை அடுத்த பாடியூர் புதுப்பட்டியை சேர்ந்த திம்மையன் (வயது 50) என்பதும், மதுபான பாட்டில்களை கடத்தி வந்ததும் தெரியவந்தது. இதையடுத்து அவரை போலீசார் கைது செய்தனர். மேலும் அவரிடம் இருந்து மது பாட்டில்கள், ஸ்கூட்டர் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர்.