செய்திகள்
கோப்புபடம்

கடிதம் எழுதி வைத்து விட்டு சிறுவன் தற்கொலை

Published On 2021-10-24 08:23 GMT   |   Update On 2021-10-24 08:23 GMT
8-ம் வகுப்பு வரை படித்துள்ள இளஞ்செழியன் சில நாட்களுக்கு முன் கொடைக்கானலில் இருந்து திருப்பூர் வந்து தாயுடன் தங்கியிருந்தார்.
திருப்பூர்:

திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானல் பகுதியை சேர்ந்தவர் கண்ணன். இவரது மனைவி தீபிகா. இவர்களது  இளஞ்செழியன் (வயது16). தீபிகா திருப்பூரில் தங்கி பனியன் நிறுவனத்தில் வேலை பார்த்து வருகிறார்.

8-ம் வகுப்பு வரை படித்துள்ள இளஞ்செழியன் சில நாட்களுக்கு முன் கொடைக்கானலில் இருந்து திருப்பூர் வந்து தாயுடன் தங்கியிருந்தார். நேற்று முன்தினம் தாய் வேலைக்கு சென்ற பிறகு வீட்டில் தனியாக இருந்த இளஞ்செழியன் ‘என் சாவுக்கு யாரும் காரணமில்லை, என கடிதம் எழுதி வைத்து விட்டு தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இதுகுறித்து அனுப்பர்பாளையம் போலீசார் வழக்குப்பதிவு செய்து சிறுவன் தற்கொலைக்கான காரணம் குறித்து விசாரித்து வருகின்றனர்.
Tags:    

Similar News