செய்திகள்
கோப்புபடம்.

தீபாவளி பட்டாசு கடை - திருப்பூர் மாநகரில் 109 பேர் விண்ணப்பம்

Published On 2021-10-24 07:39 GMT   |   Update On 2021-10-24 07:39 GMT
திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புறநகரில் 120 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர்.
திருப்பூர்:
  
தீபாவளி பண்டிகையையொட்டி நடப்பாண்டு தற்காலிக பட்டாசு கடைக்கு அனுமதி கேட்டு திருப்பூர் மாநகரம் மற்றும் புறநகர் போலீசில் பலர் விண்ணப்பித்திருந்தனர். விண்ணப்பித்தவர்கள் அனைவரும், தீயணைப்பு துறை, உள்ளாட்சி மற்றும் வருவாய் துறையினரின் ‘தடையின்மை சான்று’ பெற்று இணைத்திருந்தனர். அதன்படி திருப்பூர் மாவட்ட போலீஸ் எல்லைக்கு உட்பட்ட புறநகரில் 120 தற்காலிக பட்டாசு கடைகளுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். 

மாநகரை பொறுத்தவரை 109 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. அவற்றை போலீசார் ஆய்வு செய்து வருகின்றனர். இன்னும்2  நாட்களில் பட்டாசு கடை அனுமதி விவரம் தெரியவரும் என்று போலீசார் தெரிவித்தனர். 
Tags:    

Similar News