செய்திகள்
மின்சார ரெயில்

பராமரிப்பு பணி: கடற்கரை-தாம்பரம் இடையே மின்சார ரெயில்கள் ரத்து

Published On 2021-10-24 03:21 GMT   |   Update On 2021-10-24 03:21 GMT
பராமரிப்பு பணி காரணமாக மின்சார ரெயில் சேவையில் இன்று 24-ந்தேதி மற்றும் 31-ந்தேதி, நவம்பர் மாதம் 7-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.
சென்னை:

சென்னை ரெயில்வே கோட்டம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

பராமரிப்பு பணி காரணமாக கீழ்க்கண்ட மின்சார ரெயில் சேவையில் இன்று (24-ந்தேதி) மற்றும் 31-ந்தேதி, நவம்பர் மாதம் 7-ந்தேதி ஆகிய ஞாயிற்றுக்கிழமைகளில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

*அதன்படி சென்னை கடற்கரை-தாம்பரம் இடையே காலை 11 மணிமுதல் மதியம் 2.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும், தாம்பரம்-கடற்கரை இடையே காலை 11.30 மணி முதல் மதியம் 3.30 மணி வரை இயக்கப்படும் மின்சார ரெயில்களும் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது.

* கடற்கரை-செங்கல்பட்டு இடையே காலை 11.15 மணி, மதியம் 12, 1, 1.20, 2, 3 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் கடற்கரை-தாம்பரம் இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.

* செங்கல்பட்டு-கடற்கரை இடையே காலை 10.15, 11 மணி, மதியம் 12.25, 1.25, 2.15 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில்கள் தாம்பரம்-கடற்கரை இடையே பகுதியாக ரத்து செய்யப்படுகிறது.



* திருமால்பூர்-கடற்கரை இடையே காலை 10.40 மணிக்கு இயக்கப்படும் மின்சார ரெயில் முழுவதுமாக ரத்து செய்யப்படுகிறது. பயணிகளின் வசதிக்காக மதியம் 1.30 மணிக்கு திருமால்பூரில் இருந்து கடற்கரைக்கு சிறப்பு ரெயில் இயக்கப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News