செய்திகள்
பெட்ரோல்

பெட்ரோல், டீசல் விலை தொடர்ந்து அதிகரிப்பு - வாகன ஓட்டிகள் கலக்கம்

Published On 2021-10-24 00:52 GMT   |   Update On 2021-10-24 00:52 GMT
சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டர் 104.52 ரூபாய், டீசல் லிட்டர் 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை:

சர்வதேச சந்தையில் நிலவும் கச்சா எண்ணெய் விலையின் அடிப்படையில், பெட்ரோல், டீசல் விலைகளை, எண்ணெய் உற்பத்தி நிறுவனங்கள் நிர்ணயம் செய்கின்றன. 

நாடு முழுதும், வைரஸ் பரவலை தடுக்க, மார்ச் இறுதியில், ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இதனால், மே வரை, பெட்ரோல், டீசல் விலையில் எந்த மாறுதலும் செய்யாமல் இருந்த பொதுத்துறை எண்ணெய் நிறுவனங்கள், தற்போது, அவற்றின் விலையை உயர்த்தி வருகின்றன. தமிழக பட்ஜெட்டில் வெளியான அறிவிப்பால் பெட்ரோல் விலையில் 3 ரூபாய் குறைக்கப்பட்டது. 

சென்னையில் நேற்று பெட்ரோல் லிட்டர் 104.22 ரூபாய், டீசல் லிட்டர் 100.25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டது.

இந்நிலையில், சென்னையில் இன்று பெட்ரோல் லிட்டருக்கு 30 காசுகள் உயர்ந்து 104.52 ரூபாய்க்கும், டீசல் லிட்டருக்கு 34 காசுகள் உயர்ந்து 100.59 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

தொடர்ந்து அதிகரித்து வரும் விலை உயர்வால் வாகன் ஓட்டிகள் கலக்கத்தில் ஆழ்ந்துள்ளனர்.
Tags:    

Similar News