செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை
கும்மிடிப்பூண்டி அருகே இளம்பெண் விஷம் குடித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
திருவள்ளூர் மாவட்டம் மாதர்பாக்கம் அடுத்த தாணிப்பூண்டி கிராமத்தை சேர்ந்தவர் மணி. விவசாயி. இவரது மனைவி எல்லம்மாள் (31). இவர்களுக்கு திருமணமாகி 12 ஆண்டுகள் ஆன நிலையில், ஒரு மகனும், ஒரு மகளும் உள்ளனர். நேற்று முன்தினம் எல்லம்மாள் வயலுக்கு தெளிக்கும் பூச்சி மருந்தை எடுத்து குடித்ததாக கூறப்படுகிறது.
இதனையடுத்து உறவினர்கள் அவரை சிகிச்சைக்காக சென்னை ஸ்டான்லி அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அய்யனாரப்பன் தலைமையில் பாதிரிவேடு போலீசார் வழக்குப்பதிவு செய்து இளம்பெண் எல்லாம்மாளின் தற்கொலைக்கான காரணம் குறித்து மேலும் விசாரித்து வருகின்றனர்.