செய்திகள்
தற்கொலை

கரூர் அருகே கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2021-10-23 12:22 GMT   |   Update On 2021-10-23 12:22 GMT
கரூர் அருகே கோவில் பூசாரி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கரூர்:

கரூர் அருகே உள்ள வாங்கல் பகுதியை சேர்ந்தவர் ஆறுமுகம் (வயது 50). இவர் நாமக்கல் மாவட்டம் மோகனூரில் உள்ள கிராமத்தில் கோவில் பூசாரியாக பணிபுரிந்து வந்தார். இவருக்கு மது அருந்தும் பழக்கம் இருந்ததாக தெரிகிறது. இந்த நிலையில் நேற்று முன்தினம் ஆறுமுகம் வாங்கல் ரோட்டில் காவிரி பகுதிக்கு அருகில் உள்ள சுடுகாட்டு பகுதியில் உள்ள புங்க மரத்தில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

இந்த சம்பவம் குறித்து தகவல் அறிந்த வாங்கல் சப்-இன்ஸ்பெக்டர் பொன்னுச்சாமி தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று அவரது உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக கரூர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News