செய்திகள்
மாணவியை கடத்திய வாலிபர் போக்சோ சட்டத்தில் கைது
திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி மாணவியை கடத்திய வாலிபரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.
நெல்லை:
தேவர்குளம் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது28). இவர் கடந்த 17-ந்தேதி அந்த பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்தி சென்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெல்லை தாலுகா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரஷீதா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி முத்துராஜை பிடித்து சிறுமியை மீட்டனர். முத்துராஜ் மீது போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.
தேவர்குளம் அருகே உள்ள ஆராய்ச்சிபட்டி கிராமத்தை சேர்ந்தவர் முத்துராஜ் (வயது28). இவர் கடந்த 17-ந்தேதி அந்த பகுதியை சேர்ந்த 16 வயது மாணவியை திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி வெளியூருக்கு கடத்தி சென்றார்.
இது குறித்து சிறுமியின் பெற்றோர் நெல்லை தாலுகா மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் செய்தனர். இன்ஸ்பெக்டர் ரஷீதா மற்றும் போலீசார் தீவிர விசாரணை நடத்தி முத்துராஜை பிடித்து சிறுமியை மீட்டனர். முத்துராஜ் மீது போலீசார் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப்பதிவு செய்து கைது செய்து சிறையில் அடைத்தனர்.