செய்திகள்
பாளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதல்- தொழிலாளி பலி
பாளையில் மோட்டார் சைக்கிள் மீது கார் மோதியதில் தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
பாளை குலவணிகர்புரத்தை சேர்ந்தவர் ராமர் (வயது44), கூலித்தொழிலாளி. இவர் கடந்த 16-ந்தேதி அப்பகுதியில் மோட்டார் சைக்கிளில் சென்று கொண்டிருந்தார். அப்போது அவ்வழியாக வந்த கார் இவர் மீது மோதியது. இதில் படுகாயம் அடைந்த அவரை மீட்டு அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை அளித்தும் பலனின்றி நேற்று நள்ளிரவு அவர் பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து இன்ஸ்பெக்டர் அன்னலட்சுமி, சப்-இன்ஸ்பெக்டர் பாட்சா, நாராயணன் ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.