செய்திகள்
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு
நாங்குநேரி அருகே மோட்டார் சைக்கிள் திருட்டு சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
நெல்லை:
நாங்குநேரி அருகே உள்ள துதியம்மாள்புரம் கிராமத்தை சேர்ந்தவர் சாமுவேல் (வயது28). இவர் தனது வீட்டில் வராண்டாவில் மோட்டார் சைக்கிளை நிறுத்தி விட்டு காம்பவுண்டு சுவர் கேட்டை பூட்டு போட்டு மூடிவிட்டு சென்னை சென்று விட்டார்.
திரும்பி வந்து பார்த்த போது மோட்டார் சைக்கிளை காணவில்லை. இதன் மதிப்பு ரூ.25 ஆயிரம் ஆகும். இது குறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப் பதிவு செய்து திருடர்களை தேடி வருகிறார்கள்.