செய்திகள்
கைது

கல்லூரி மாணவி பலாத்காரம்- வாலிபர் போக்சோவில் கைது

Published On 2021-10-23 07:37 GMT   |   Update On 2021-10-23 07:37 GMT
திருமணம் செய்வதாக ஆசை வார்த்தை கூறி கல்லூரி மாணவி பலாத்காரம் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக வாலிபர் போக்சோவில் கைது செய்யப்பட்டார்.
கவுண்டம்பாளையம்:

நீலகிரியை சேர்ந்தவர் 17 வயது சிறுமி. இவர் கோவையில் உள்ள கல்லூரியில் முதலாம் ஆண்டு படித்து வருகிறார்.

இந்த நிலையில் இவருக்கு சில மாதங்களுக்கு முன்பு இன்ஸ்டாகிராம் மூலம் திருப்பூர் மாவட்டம் தாராபுரத்தை சேர்ந்த முகமது வாபிக்(24) என்பவருடன் பழக்கம் ஏற்பட்டது.

முதலில் 2 பேருமே நட்பாக இன்ஸ்டாவில் பழகி வந்தனர். இந்த நட்பு நாளடைவில் காதலாக மாறியது. இருவரும் பரஸ்பரம் தங்களது செல்போன் எண்களை பரிமாறி கொண்டு மணி கணக்கில் பேசி தங்களது காதலை வளர்த்து வந்தனர்.

இந்த நிலையில் முகமது வாபிக் மாணவியிடம் நாம் இருவரும் போனிலேயே பேசி கொள்கிறோம். ஆனால் நேரில் சந்தித்து கொள்ளவில்லை. எனவே நாம் 2 பேரும் நேரில் சந்தித்து பேசுவோம் என அழைத்தார். மாணவியும் வருவதாக சொன்னார். கடந்த 19-ந் தேதி திருப்பூரில் இருந்து வாலிபர் கோவை மேட்டுப்பாளையத்திற்கு வந்தார். அங்கு தனது காதலியை சந்தித்து பேசினார். பின்னர் அவரை மேட்டுப்பாளையம் அருகே உள்ள கல்லார் பகுதிக்கு அழைத்து சென்றார்.

அங்கு 2 பேரும் வெகுநேரமாக தனிமையில் சந்தித்து பேசி கொண்டிருந்தனர். அப்போது வாலிபர் மாணவியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கட்டாயப்படுத்தி பலாத்காரம் செய்தார். அதற்கு பிறகு முகமது வாபீக் மாணவியை தொடர்பு கொள்ளவில்லை. மாணவி தொடர்பு கொண்டாலும் எடுப்பதில்லை. இதனால் தான் ஏமாற்றப்பட்டதை உணர்ந்த மாணவி சம்பவம் குறித்து துடியலூர் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். அதன்பேரில் இன்ஸ்பெக்டர் அன்னம், முகமது வாபிக் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து, அவரை கைது செய்தார். பின்னர் கோர்ட்டில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News